புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, January 22, 2010

ஞானம்

ஈரமேறிப்போன
மார்கழியிரவொன்றில்
வெதுவெதுப்புக்காகத்
தேர்ந்திருக்கலாம்
மாடிப்படிகளை

எதிர்பாராத
என் வருகையில்
வெடுக்கென்று பிடுங்கிய
தூக்கத்தின் மிச்சத்தைத்
தூக்கிச்செல்கிறதொரு நாய்
மருட்சியுடன்

இருளைத் துளைத்து
நிகழ்ந்திருக்க வேண்டாம்
இப்பின்னிரவிலென் வருகை

Thursday, January 07, 2010

மீள் சிறகுகள்

வேறு கவனமெதையும்
மிகக்கவனமாகத் தவிர்த்த
ஓய்வுகளற்ற
நெடியவிரு பயணங்களினூடே
எதேச்சையாக எனும்படியாகத்தான்
எதிர்ப்பட்டுக்கொண்டோம்
ஒரு பறவையும்
நானும்

வளையலகு கொண்டதொரு
பறவையின் சிறகுகளும்,
விரிந்த கண்களுடைய
யாத்ரீகனொருவனின்
கால்விரல்களும்,
பிறிதொரு நாள்
வந்தமர்ந்து
இளைப்பாறக்கூடும்
இருவேறு பயணக்குறிப்புகளில்

-சேரல்

உரையாடல் கவிதைப்போட்டிக்காக.....

போட்டிக்கான எல்லாக் கவிதைகளும் இங்கே....