புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, February 10, 2010

அப்படியே

அப்படியே இருப்பது
சௌகரியம் என்றாலும்
எப்போதும் வாய்த்துவிடுவதில்லை

காய்ந்துகிடக்கும்
தார்ச்சாலைகளை
நக்கி நக்கி ஊர்ந்துபோகும்
வெயில் நாயைத்
துரத்தியடித்துப்
பெய்துவிடுகிறது மழை

மழை நனைத்த
எதுவும்
அதுவாகவே இருப்பதில்லை...

ஆனாலும்
மழையில்
உடைந்து விழும்
நீரின் ஒவ்வொரு துண்டும்
இருந்து விடுகிறது
நீராகவே