'புன்னகை' கவிதை இதழின் அறுபதாவது வெளியீட்டுக்காக அறுபது கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட இருப்பதாக நண்பர் 'நிலாரசிகன்' வலைப்பூ மூலமாகத் தெரிந்து கொண்டேன். கவிஞர் அம்சப்ரியா ஆசிரியராகச் செயல்படும் இவ்விதழுக்கு என் கவிதையை அனுப்பி இருந்தேன். அக்கவிதை தேர்வு செய்யப்பட்டு ஏப்ரல் 2010 இதழில் வெளிவந்திருக்கிறது. அறுபது கவிஞர்களில் ஒருவனாகத் தேர்வானது குறித்து மகிழ்ச்சி. தகவல் அளித்த நண்பர் நிலாரசிகனுக்கும், தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கும் நன்றிகள்.
பிரசுரிக்கப்பட்ட கவிதை : அப்படியே
-ப்ரியமுடன்
சேரல்
Friday, April 30, 2010
Wednesday, April 28, 2010
நிர்வாணம்
Monday, April 19, 2010
அலைநீளம்
கடலற்ற
கடலினடியே
கடலின் கரையாகிறது
உள்ளங்கையோடும்
ரேகைகள் போலும்
ஒன்றுபோலிருப்பதில்லை
மாறி மாறி
எல்லை போடும் கடலலைகள்
அலைநீளம்
நிர்ணயிக்கிறது
கடலின் பரப்பை
அல்லது
கரையின் பரப்பை
ஒத்தத் தொலைவிருந்து
எல்லாம் ரசித்திருக்கும்
வானம் பார்த்துக் கிடக்கின்றன
கடலும்,
கடலாகக்கூடும்
கரையும்
கடலினடியே
கடலின் கரையாகிறது
உள்ளங்கையோடும்
ரேகைகள் போலும்
ஒன்றுபோலிருப்பதில்லை
மாறி மாறி
எல்லை போடும் கடலலைகள்
அலைநீளம்
நிர்ணயிக்கிறது
கடலின் பரப்பை
அல்லது
கரையின் பரப்பை
ஒத்தத் தொலைவிருந்து
எல்லாம் ரசித்திருக்கும்
வானம் பார்த்துக் கிடக்கின்றன
கடலும்,
கடலாகக்கூடும்
கரையும்
Thursday, April 08, 2010
மீதமிருக்கும் இரவு
உடலைச் சதுரமாக்கி
உள்நுழையும் காற்றுக்கெனத்
திறந்திருந்த
சாளரத்தின் வழி புகுந்து
படர்கிறது சிகரெட் புகை
அது,
பின்னிரவின் அமைதியின்
பிடியில் சிக்குண்டு
தூக்கமற்று அழும்
எவனோ ஒருவனின்
மன இடுக்குகளில் நுழைந்து
சாந்தப்படுத்துகிறது
மூச்சுத்திணறத்திணற
விழித்தெழுந்து
வியர்க்கிறேன்
தூக்கமற்ற வெளியில்
மிதந்து போய்
இன்னொரு சிகரெட்
பற்றவைக்கிறான் அவன்
தொற்றுநோயெனப்
பற்றிவிட்ட விழிப்பின் பிடியில்
எப்படிக் கழிப்பதென்ற
திட்டமிடலிலேயே
கழிக்கிறேன்
என் மீதியிரவை
உள்நுழையும் காற்றுக்கெனத்
திறந்திருந்த
சாளரத்தின் வழி புகுந்து
படர்கிறது சிகரெட் புகை
அது,
பின்னிரவின் அமைதியின்
பிடியில் சிக்குண்டு
தூக்கமற்று அழும்
எவனோ ஒருவனின்
மன இடுக்குகளில் நுழைந்து
சாந்தப்படுத்துகிறது
மூச்சுத்திணறத்திணற
விழித்தெழுந்து
வியர்க்கிறேன்
தூக்கமற்ற வெளியில்
மிதந்து போய்
இன்னொரு சிகரெட்
பற்றவைக்கிறான் அவன்
தொற்றுநோயெனப்
பற்றிவிட்ட விழிப்பின் பிடியில்
எப்படிக் கழிப்பதென்ற
திட்டமிடலிலேயே
கழிக்கிறேன்
என் மீதியிரவை
Subscribe to:
Posts (Atom)