புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, November 16, 2010

இழை

கூரிய வாட்களைக்
கிழித்துவிடும் இழையாய் இருக்கிறது.

அறுந்துவிடும் எனப்
பயங்கொள்கிறாய்

கிழிந்துவிட்ட வாட்களுக்காய்ப் பரிதவிக்கிறேன்
அவை வாட்களே என்றாலும்

உன் இழையை
எதிர்கொள்ளும் புள்ளிகளைத்
தவிர்க்கச் சொல்லித் தருகிறேனென் வாட்களுக்கு

இனி வாட்கள் வாட்களாகவே இருக்கும்,
வாட்களாக இருப்பதன்றி
வேறெதுவும் செய்யாது.

No comments: