புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, December 16, 2010

மக்கள் கலை இலக்கிய விழா

இவ்வாண்டும் மணல் வீடு சிற்றிதழும், களரி அமைப்பும் இணைந்து நடத்தும் மக்கள் கலை இலக்கிய விழா சிறப்புற நிகழவிருக்கிறது. அது குறித்த அறிவிப்பு கீழே.





-----------------------------------------------

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,

ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,

கீழுள்ள வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.

M.HARIKRISHNAN
INDIAN BANK,
MECHERI BRANCH,
SB A/C - 534323956

தொடர்புக்கு - மு.ஹரிகிருஷ்ணன், மணல்வீடு ஆசிரியர் (9894605371)

Friday, December 03, 2010

தலையெழுத்து

ஒரு கவிதையின் தலையெழுத்து
என்னவாகவும் ஆகலாம்

கொண்டாடப்படலாம்

கொளுத்தப்படலாம்

புறக்கணிக்கப்படலாம்

கவனமற்று மறக்கப்படலாம்

மீண்டும் கூட எழுதப்படலாம்

வேறோர் இடத்தில்
வேறொரு காலத்தில்
வேறொரு தளத்தில்
வேறொரு மொழியில்
வேறொரு மனதில்