புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, January 08, 2011

மு.ஹரிகிருஷ்ணன் - புத்தக வெளியீடு

மணல் வீடு சிற்றிதழின் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு இது.

நாள்:12-1-2011
நேரம்: புதன் மாலை 5.00மணி
இடம்:டிஸ்கவரி புக் பேலஸ்.
முனுசாமி சாலை. கே.கே. நகர்.
சென்னை.78.

தலைமை.
முனைவர்.கே.ஏ. குணசேகரன்

முன்னிலை:
பிரளயன்

வரவேற்புரை:
கறுத்தடையான்

நூல் : அருங்கூத்து(பதிப்பு : மணல்வீடு)

வெளியிடுபவர்:
அ.மார்க்ஸ்

முதல் பிரதி பெறுவோர்:
அசுவகோஷ்
வீர சந்தானம்
கிருஷாங்கினி
தமிழ்நதி

மதிப்புரை:
வெளி.ரங்கராஜன்
கரிகாலன்
விகாரன்

நூல் : நாயிவாயிச்சீல (பதிப்பு : பாரதி புத்தகாலயம்)

வெளியிடுபவர்:
இமயம்

முதல்பிரதி பெறுவோர்:
ப்ரியா பாபு
நீலகண்டன்
கோசின்ரா
ஆதிரன்

மதிப்புரை:
கீரனூர் ஜாகிர்ராஜா

சிறப்புரை:
அ.மார்க்ஸ்
நிறைவுரை:
பி.லெனின்

நிகழ்ச்சித்தொகுப்பு:
வெய்யில் முத்து

நன்றியுரை:
தவசிக்கருப்புசாமி(மு.ஹரிகிருஷ்ணன்)

நிகழ்வு ஏற்பாடு:
ர.தனபால்.

புத்தகக் காட்சி

ஐந்தாம் நாளில் புத்தகக்காட்சிக்குச் செல்ல முடிந்தது. இம்முறை கிராமியப் பண்பாடு, சடங்குகள், பழக்க வழக்கங்கள், பழங்குடி இனத்தவர் பற்றிய பதிவுகளைச் செய்யும் நூல்களை வாங்குவதாகத் திட்டமிட்டிருந்தேன். அதிலும் புனைவல்லாதனவாக வாசிக்க ஆர்வமாக இருந்தது. அவ்வகையிலான நூல்களை இனங்காணுவது கொஞ்சம் சிரமமாகவிருந்தது. இணையத்தில் தேடியும், நண்பர்களின் உதவியுடனும் சில புத்தகங்களைக் கண்டுகொண்டேன். மற்ற புத்தகங்களைப் புத்தகக்காட்சியில் தேடிக்கொள்ளலாம் என்ற முடிவுடன் சென்றேன். முடிவின் விளைவை வெகுவாகவே அனுபவிக்க நேர்ந்தது. நிறைய தேடியலைந்தும் தயார் செய்திருந்த பட்டியலைத் தாண்டி சில புத்தகங்களையே காண முடிந்தது. குறிப்பிட்ட சில பதிப்பகங்களில் மட்டுமே நான் தேடிச்சென்ற வகையிலான புத்தகங்கள் கிடைத்தன.

பொதுவாகவே இம்முறை பதிப்பகங்கள் வறட்சியடைந்திருப்பதாகப்பட்டது. புத்தகக் காட்சியில் புத்தகமல்லாத பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் சென்ற ஆண்டைவிட இம்முறை அதிகரித்திருக்கின்றன. தமிழைத் தவிர்த்த பிற மொழிப் புத்தகங்கள் அதிகமாக இல்லை. போகிற போக்கில் காதில் விழுந்த வரிகள் இரு பதின்பருவ இளைஞர்களிடமிருந்து வந்ன , 'ஏன் ஒரே தமில் புக்ஸா இருக்கு?' 'சென்னை புக் ஃபேர் இல்ல. அதான்.....'. கேட்டதும் சிரித்துக்கொள்ளத் தோன்றியது.

குறித்து வைத்திருந்த பதிப்பகங்களில் சில புத்தகங்களை வாங்கினேன். காலச்சுவடு பதிப்பகத்தில் 750 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் ஒரு வருட காலச்சுவடு இதழ் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்றார்கள்; வாங்கினேன். வம்சி பதிப்பகத்தில் மட்டும் விற்பனையில் இருக்கும் இளைஞர் எந்த மாதிரியான புத்தகங்கள் வாங்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டு சில புத்தகங்களைப் பற்றிய அறிமுகத்தையும் தந்தார். அவர் சொன்னதற்காகவே ஒரு புத்தகத்தை வாங்கினேன். இந்த அணுகுமுறை வேறெந்தப் பதிப்பகத்திலும் இருக்கவில்லை.

சந்தியா, காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு இவற்றில் கேட்ட புத்தகத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தார்கள். அதைத் தாண்டிய அறிமுகங்களைச் செய்யவேண்டிய கட்டாயம் அவர்களுக்கில்லாதிருப்பதும் உண்மையே.

விற்பனை நிலையங்களுக்கு இடையேயான பாதைகளுக்கு வள்ளுவர் பாதை, பாரதி பாதை, ஷெல்லி பாதை என்பன போன்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள். இது சென்ற ஆண்டு இருந்ததாக நினைவில்லை. பாதைகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெறும் பெயர்களாக இருந்தாலும் அழகும், பயனும் கூட்டுவனாக இருக்கின்றன இந்தப் பெயர்கள்.

ஏற்கனவே வாசிக்காமல் மீதமிருக்கும் புத்தகங்கள் நிறைய. ஆனாலும் என்றாவது வாசித்து விட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் வாசிக்கப்படுவதற்கான தருணம் தானாகவே நிகழ்கிறது. வாங்கி இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்த பின் திடீரென ஓரிரு தினங்களில் வாசித்து முடித்த புத்தகங்களும் என்னிடம் உண்டு. அந்த நம்பிக்கை தந்த தைரியத்தில் இவ்வருடமும் வாங்கிச் சேர்த்த புத்தகங்கள் கீழே.

உயிர்மை பதிப்பகம்
கிராமத்து தெருக்களின் வழியே - ந.முருகேச பாண்டியன்
தமிழ் மண்ணின் சாமிகள் - மணா
மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - கழனியூரன்
401 காதல் கவிதைகள் - சுஜாதா(நண்பருக்காக)

கிழக்கு பதிப்பகம்
உணவின் வரலாறு - பா.ராகவன்
இருளர்கள் ஓர் அறிமுகம் - க.குணசேகரன்
சுகப்பிரசவம் - டாக்டர் மகேஸ்வரி ரவி(மனைவிக்காக)

காலச்சுவடு பதிப்பகம்
ஒரு நகரமும் ஒரு கிராமமும் - எஸ்.நீலகண்டன்
உப்பிட்டவரை - ஆ.சிவசுப்பிரமணியன்
ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான்
என்னைத் தீண்டிய கடல் - வறீதையா கான்ஸ்தந்தின்
பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்
மூதாதையரைத் தேடி - சு.கி.ஜெயகரன்
அரபிக்கடலோரம் - சக்கரியா (தமிழில் : சுகுமாரன்)
கானுறை வேங்கை - கே.உல்லாஸ் கரந்த்(தமிழில் : தியடோர் பாஸ்கரன்)
அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவன்

வம்சி பதிப்பகம்
சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு(தமிழில் : கே.வி.ஷைலஜா)
கிளிஞ்சல்கள் பறக்கின்றன - வலைப்பதிவர்களின் கவிதைகள் (தொகுப்பு : ஜே.மாதவராஜ்)
வியாழக்கிழமையைத் தொலைத்தவன் - விக்ரமாதித்யன்(நண்பருக்காக)
பாலு மகேந்திராவின் 'கதை நேரம்' குறுந்தகடுகள்

சந்தியா பதிப்பகம்
கிராமங்கள் பேசுகின்றன - கார்முகில்
வட்டமிடும் கழுகு - ச.முகமது அலி

க்ரியா பதிப்பகம்
கடவு - திலீப்குமார்

தான் பதிப்பகம்
சாப்பாட்டுப் புராணம் - சமஸ்

அகரம் பதிப்பகம்
பண்பாட்டு பொருண்மைகள் - மா.சுந்தர பாண்டியன்

தாகம் பதிப்பகம்
சித்திரப்பாவை - அகிலன் (நண்பருக்காக)

ஸ்ரீ விஜயம் பதிப்பகம்
சேகர் சைக்கிள் ஷாப் - விக்ரமாதித்யன்(நண்பருக்காக)

அதிகமாக படைப்பிலக்கியங்கள் வாங்கவில்லை என்பது பட்டியலிட்டபின் புலனானது. இப்போதைய விருப்பம் படைப்பிலக்கியமாக இல்லாதிருப்பதால் இப்படி. அடுத்த புத்தகக்காட்சிக்கு முன் இவற்றில் எத்தனைப் புத்தகங்களை வாசிக்க முடிகிறது என்பதைப் பார்ப்போம்.

Friday, January 07, 2011

புத்தகக் கண்காட்சி

கிராமியப் பண்பாடு, வாழ்க்கை முறை, சடங்குகள், வெவ்வேறு ஊர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் பழங்குடி இனத்தவரின் வாழ்க்கை இவற்றைப் பதிவு செய்யும் புத்தகங்களை இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் வாங்குவதாய் உத்தேசம். நானே முயன்றும், நண்பர்களின் உதவியுடனும் சில புத்தகங்களை அடையாளம் கண்டிருக்கிறேன். இந்த வகையைச் சேர்ந்த புத்தகங்கள் உங்களுக்குத் தெரிந்தால் தெரிவித்து உதவவும். புனைவல்லாத புத்தகங்களாக இருத்தல் மிக விருப்பம். நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்