புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, March 26, 2011

வழியனுப்புதல்

வழியனுப்புதலின்
வெவ்வேறு இடங்களில்
வெவ்வேறு நிலைகளில்
வாழ்வு

பேருந்து நிலையங்களில்

இரயில் நிலையங்களில்

சிறுபொழுது வசித்த
வாழ்விடங்களின் வாசல்களில்

சிலமுறைகள் விமான நிலையங்களிலும்

நகர்ந்தபின் உணவுண்ணும் நினைப்பில்

கழிவகற்றும் முனைப்பை அடக்கிக்கொண்ட
சிரிப்போடான பேச்சில்

தூக்கம் தொலைந்த துக்கத்தில்

திரும்பிச் செல்லும் பயணம் குறித்த கவலையில்

எந்தச் சிந்தனையுமற்று
முன்னிலை மற்றும் படர்க்கையில் மட்டும்
இதுவரை
இழவு வீடுகளில்

No comments: