புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, January 29, 2013

அடையாளம்

நான் என்பதாய்
அடையாளப்படுத்துகிறது குழந்தை

ஒரு நிழலை
ஒரு மரத்தை
ஒரு கேலிச்சித்திரத்தை
ஒரு நட்சத்திரத்தை
ஒரு கூண்டு மிருகத்தை
ஒரு பேரலையின் மிச்சத்தை

வளர்ந்தபின் அடையாளப்படுத்தும்
நான்களை விடவும்
உத்தமமாகவே இருந்து விடுகிறதது
எப்போதும்