புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, May 17, 2013

அந்தரங்கம்

இறந்தவர்கள் எழுதிவைத்த
நாட்குறிப்புகளைச் சேகரிக்கும்
வினோத பழக்கம் கொண்ட மனிதனின்
நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம்
அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு

தன் ஆராய்ச்சியின் பலனாக
மூன்று முக்கிய முடிவுகளை அறிவித்திருந்தான் அவன்

இப்போதெல்லாம் மனிதர்கள்

அதிகமாக நாட்குறிப்பு எழுதுவதில்லை

எழுதுபவர்களில் பெருமளவு

அதை அடுத்தவர் வாசிப்பதை மிகவும் விரும்புகிறார்கள்

இரண்டாம் முடிவின் விளைவாகவும்
அவர்களின் அந்தரங்கம் புதைந்தே போகிறது
முன்னெப்போதைப்போலவும்